கல்லூரிக் கல்வி இயக்குநராக மீண்டும் ஆட்சிப்பணி அதிகாரியா?
அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு
சென்னை,அக்.2- கல்லூரிக் கல்வி இயக்குநராக மீண்டும் ஆட்சிப்பணி அதிகாரியை நியமித்திருப்பதற்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மீண்டும் கல்லூரிக் கல்வி இயக்குநராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில், கல்லூரிக் கல்வி இயக்குநராகும் வாய்ப்பை தவிர்ப்பது நியாயம் அல்ல. எனவே, தமிழக முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் உடனே தலையிட்டு கல்லூரிக்கல்வியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரை பணி மூப்பின் அடிப்படையில் கல்லூரிக்கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு
சென்னை,அக்.2- தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
2023-2024 மாதிரி பதிவு அமைப்பு (எஸ்ஆர்எஸ்) தரவுகளின்படி, மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 45.5 ஆக இருப்பதை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் குறைவாகக் குறைக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அரசு முடிவு செய்து, மாநில அளவிலான சிறப்பு பணிக் குழுவை அரசு அமைத்துள்ளது. அவ்வாறே, மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு, இதர உறுப்பினர்களுடன் செயல்பட்டு, ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான விரிவான பிறப்பு திட்டமிடலை செயல்படுத்தும். இந்த முயற்சியினை வலுவாக்க வல்லுநர்கள் மற்றும் நிபுணத்துவ நிறுவனங்களை இணைத்துக் கொள்ளவும் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது
சென்னை, அக்.2- மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு : மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பெ.சின்னகாமணன், விழுப்புரம் தாலுகா சட்டம் ஒழுங்கு காவல்நிலைய தலைமைக் காவலர் கி.மகாமார்க்ஸ், திருச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் க.கார்த்திக், சேலம் மாவட்டம், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள் கா.சிவா மற்றும் ப.பூமாலை ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்விருது, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும். இவ்விருது டன், பரிசுத் தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை
சென்னை, அக்.2- சென்னையில் மின்சார கார்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் ஆலோ சனை செய்து வருவதாக தக வல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது அமெரிக்க பய ணத்தின் போது விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி மீண் டும் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில் அங்கு மின் சார கார்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருவ தாக தகவல் வெளியாகி உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், கருத்து தெரி வித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வாகனத் துறையில் தற் போது நிலவும் சூழலுக்கு ஏற்ப மின்சார கார் உற்பத்தி யில் ஃபோர்டு ஈடுபடலாம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே டாடா, வியட்நாமின் வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தமிழ் நாட்டில் மின்சார கார்களை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி மையமாக தமிழ் நாடு தன்னை முன்னிறுத்தி யதை தொடர்ந்து, புதிய முத லீடுகளை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் மோதி ரயில்வே ஊழியர் பலி
அம்பத்தூர், அக். 2- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சேகர் (63). இவர் ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். சேகர் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை 6 மணியளவில், அருகே உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அயப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த குடிநீர் விநியோகம் செய்யும் டிராக்டர் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.