சென்னை,ஜன.12- சென்னை எண்ணூரில் அம்மோ னியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. எண்ணூர் பெரிய குப்பம் பகுதி யில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல் லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து, எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தி யுள்ளது.
இதனிடையே, அமோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்ப டும் என சுற்றுச்சூழல் துறை அதிகாரி கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமோனியா கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, ஒரு சில நாட்களில் அரசிடம் அறிக்கை சமர்பிக்கும். அறிக்கை யின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக் கிறது. மேலும் இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.