சென்னை, ஜன.9- தமிழ்நாட்டில் மூன்று பல்கலைக்கழ கங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக, அமைத்த குழுக் களை உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி திரும்பப் பெற்றார். சென்னை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை ஆகியவற்றில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பு வதில் ஆளுநர் ஆர்.என். ரவி புதிய உத்த ரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
அதில், “பல்க லைக்கழக மானியக் குழு பிரதிநிதி ஒரு வரும் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழுவில் இருக்க வேண்டும்” எனக் கூறியிருந் தார். மேலும் சம்பந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக யுஜிசி உறுப்பினர்களைக் கொண்ட நான்கு பேர் அடங்கிய தனித்தனிக் குழுக் களை அமைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரங்கள் தொடர்பாக தமி ழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர் நிய மனம் தொடர்பாக தமிழக அரசும், ஆளு நரும் பேசி, சுமூக முடிவு எடுக்க வேண் டும் என்று தெரிவித்தது. அதனடிப்படை யில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளு நரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, துணைவேந்தர்களை தேடுதல் செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதியை நீக்க தமி ழக அரசால் அரசாணை வெளியிடப் பட்டது.
இந்தச் சூழலில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடல் குழுவை திரும்ப பெறுவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றத் தீர்ப்பு விவரங்களைச் சுட்டிக் காட்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேடு தல் குழுவை தமிழ்நாடு அரசு நியமிக்கும் என நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.