சிதம்பரம், அக். 8- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜோதி லட்சுமி பத்ராவுக்கு சகோதரத்துவம், அன்பு, சேவை ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்ட சாரண சாரணியர் இயக் கத்தின் மூலமாக 2018-19 கடலூர் மாவட்டத் திற்காக ராஜ்ய புரஷ்கார் விருது வழங்கப் பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமி ழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விருதை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்து மாணவிக்கு வாழ்த்து தெரி வித்தார். பள்ளியின் சாரண ஆசிரியை ஜெயந்தி, கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், சிதம்பரம் மாவட்டக் கல்வி அலு வலர் மோகன், பள்ளியின் தாளாளர் வீன்ஸ் குமார், பள்ளியின் முதல்வர் ரூபியாள் ராணி உள்ளிட்டோரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.