tamilnadu

img

7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் - வைரமுத்து ட்வீட்

7 பேர் விடுதலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருணை காட்டியுள்ளது. தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகும், விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெரும் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு பரிந்துரை அனுப்பியது. அதன் மீது 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காத தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இது குறித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டப் பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தானே நேரடியாக ஆயுள் தண்டனை சிறைவாசிகளையோ, மரண தண்டனை கைதிகளையோ விடுதலை செய்யலாம். என்றாலும்,உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், சட்ட நிலைமைகளையும் எடுத்துக்காட்டி தமிழக ஆளுநரை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் 7 தமிழர் விடுதலைக்கு தாமதம் செய்வது ஏன் என்று கேட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருணை காட்டுகிறது; தமிழக அமைச்சரவை முன்பே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது; எங்களுக்கு மறுப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகிறது. இதன் பிறகும் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.