தமிழ்நாடு அரசின் 4 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சென்னை காவல் சட்டத்தை கோவை, திருநெல்வேலி, மதுரை, சேலம், ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல்,
சென்னை கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்க வகை செய்யும் மசோதா,
புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு மக்கள் தொகை உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை குறைத்தல் போன்ற தமிழ்நாடு அரசின் 4 மசோதாகளுக்கு ஆளூநர் ஒப்புதல் அளித்துள்ளார்.