tamilnadu

கொரோனாவின் போது உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு அரசு பணி

சென்னை,நவ.20- ‘நவம்பர் 22 ஆம் தேதியுடன், கொரோனா  பாதிப்பால் மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா முதல் அலையில்  பணியாற்றியபோது தொற்று ஏற்பட்டு உயிரி ழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்ததை  இதுநாள் வரை செய்யவில்லை. தனக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என விவேகானந்தன் மனைவி கண்ணீருடன் தமிழ்நாடு முதல்வருக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்த பிறகும், முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

இதற்கிடையே, பணியின் போது இறந்த  ஊழியர் குடும்பத்திற்கு கருணை அடிப்படை யில் அரசு வேலை கேட்டு, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பட்டு தேவானந்து அளித்த தீர்ப்பில், கருணை வேலை என்பது பணி யின் போது இறந்த ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கும் சமூக பாது காப்பு நடவடிக்கையாகும். மனுதாரரின் மகனுக்கு 6 வாரத்திற்குள் கருணை வேலை  வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

எனவே, தன் கணவனை கொரோனா வுக்கு எதிரான போரில் பலி கொடுத்து, மூன்று  ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணை தன் கைகளால் தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.