tamilnadu

img

வகை மாற்றம் செய்யாத அரசு: அச்சத்தில் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டு தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெரும் பாலான மக்களுக்கு குடிமனைப் பட்டா கிடையாது. வாழ வழித்தேடி நகரத்திற்கு வந்த மக்கள் சிறுகசிறுக சேமித்த பணத்தில் நிலத்தை வாங்கி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற னர். 50 ஆண்டுகளை கடந்த பிறகு,  மக்கள் வாழும் இடங்களை ‘ஆக்கிர மிப்பு’ என்று வகைப்படுத்தி வருவாய்த் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி இழந்து தவிக் கின்றனர். ஆக்கிரமிப்பு என்ற பெயரால் குடிசைகளை அகற்றுவது மாறி, அடுக்குமாடி குடியிருப்புகள் அகற்றப் படுகிறது. வாழ்வின் லட்சியமாக பல ஆண்டுகால உழைப்பில் உருவான குடியிருப்புகளை ராட்சத எந்திரங்கள் நொறுக்குவதை பார்த்து மக்கள் மனவெதும்பி போகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தங்களது குடியி ருப்பிலிருந்து  பல கிலோ மீட்டர் தொலை வில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிகளில் புறாக்களை கூண்டு களில் அடைப்பதை போன்று  அடைப்பதை  மக்கள் விரும்பவில்லை.

நீதிமன்றத்தை காரணம் காட்டாதே

அரசு நிலங்களில் வசிக்கும் மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க; பட்டா வழங்க தமிழக அரசு ஏராளமான அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படியே வகைமாற்றம் செய்து பட்டா வழங்க முடியும். ஆனாலும், நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களை அரசு நிர்வாகம் ஏமாற்றுகிறது. நீட் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கொள்கை முடிவெடுத்தது போன்று, பட்டா வழங்கவும் அரசு துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வகை மாற்றம் செய்யமுடியாதா?

தாம்பரம் மாநகராட்சி பகுதி யில் 10 ஏரிப் பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக  பட்டியல் தயார் செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு  முன்பு உள்ள கணக்கை வைத்து வீடு களை இடிக்க நோட்டீஸ் வழங்கினர்.  தொடர்ந்து வழங்கியும் வருகிறார்கள்.  பயன்பாட்டில் உள்ள நீர்நிலை களையே வளர்ச்சி என்ற பெயரால்  வகைமாற்றம் செய்து  பெரும் நிறு வனங்களுக்கு பட்டா தரப்படுகிறது. பயன்பாட்டை இழந்த நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா மறுப்ப தோடு, ஆக்கிரமிப்பாளர்கள் என்று  முத்திரை குத்துவது எந்த வகையில் நியாயம் என்று அப்பகுதி மக்கள் ஆட்சி யாளர்களை பார்த்து கேட்கிறார்கள்.

பட்டா கோரிக்கை மாநாடு

அடுக்குமாடி  வீடுகளை இடித்து விட்டு நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? இந்த நிலையில்தான் ஜூன் 2ந் தேதி தாம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மக்களை சந்தித்த போது அவர்களின் வாதத்தில் நியா யம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.