tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை; சங்கத் தலைவர்களிடம் அரசு செயலாளர் உறுதி

சென்னை, ஆக. 27 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, செய லாளர் பி. ஜீவா, எம். குமார் ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் துறைச் செயலாளர் சிஜி  தாமஸை நேரில் சந்தித்து மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு அளித்து பேசினர்.

குறிப்பாக, “சமூகப் பாது காப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் 1500 ரூபாய் மாதாந்திர உத வித் தொகை கோரி, புதிதாக விண்ணப்பித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உதவித் தொகை கிடைக்காமல் காத்திருக்கும் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் உட னடியாக உதவித்தொகை வழங்கிடு மாறு தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை அவர் களுக்கு உதவித்தொகை வழங்கப் படாமல் உள்ளது. இதனால், ஏராள மான மாற்றுத்திறனாளிகள் வேறு வாழ்வாதாரம் எதுவுமின்றி மிகுந்த வேதனையில் வாழ்ந்து வருகின்ற னர். எனவே, அவர்கள் அனைவருக் கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.

அதுபோன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தில் (100 நாள் வேலை) வேலை  செய்துவரும் மாற்றுத் திறனாளி களுக்கு இந்த நிதி ஆண்டில் இதுவரை வேலை வழங்கவில்லை என்பதோடு, வேலை வழங்கப்பட்ட சில இடங்களிலும் அவர்களை 4 மணி நேர வேலைக்கு பதிலாக 8 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துவதும், இத னால் மாற்றுத் திறனாளி தொழி லாளர்கள் பல்வேறு உடல் உபாதை களுக்கு ஆளாகி மிகுந்த சிரமப்படு வதும் உள்ளது. எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெ னவே வழங்கப்பட்டது போன்று 4 மணி நேர வேலை, இலகுவான வேலை, முழு ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல  அலுவலகங்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலு வலர் உட்பட போதிய ஊழியர் கள் இல்லாததால் பல்வேறு உதவிகளுக்காக இவ்வலு வலகங்களுக்கு வரும் மாற்றுத்திற னாளிகள் நீண்ட நேரம் அலைக் கழிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங் களிலும் போதுமான ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் மாற்றுத் திறனாளி களுக்கு தொடர்ச்சியாக மாற்று  வேலை வழங்கிடவும், அனைத்து  மாற்றுத் திறனாளி ஊழியர்களுக் கும் ஊர்திப்படி 2 ஆயிரத்து 500  ரூபாயை முழுமையாக வழங்கிட வும், ஏற்கனவே மாற்றுத் திறனாளிக் கான தேசிய அடையாள அட்டை  வைத்திருக்கும் மாற்றுத் திறனாளி களை மீண்டும், மீண்டும் மருத்துவ சான்றிதழுக்காக மருத்துவ குழு மத்திடம் அனுப்பும் நடைமுறை யை கைவிட வேண்டும். உலக ஊன முற்றோர் தினமான டிசம்பர் 3 அன்று  போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்று த்திறனாளிகளுக்கு கட்டாய சிறப்பு விடுப்பு அளிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக் கைகளை கேட்டறிந்த மாற்றுத் திறனாளிகள் துறைச் செயலாளர் சிஜி தாமஸ், அவை அனைத்தை யும் நிறைவேற்றிட சம்பந்தப் பட்ட துறைகளை வலியுறுத்துவ தாகவும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கும் விரைவில் உதவித் தொகை வழங்க இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.