tamilnadu

img

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை செயல்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்குள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும்  செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு. தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பஸ் சேவை செப்டம்பர் 7- ம்தேதி முதல் இயக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.