tamilnadu

img

போலி சான்றிதழ்கள் மூலம் அரசு வேலை: சிக்கிய 200 வட மாநிலத்தவர்கள்...!

போலி சான்றிதழ்கள் மூலம் அரசு பணிகளில் வட மாநிலத்தவர்கள் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலிச் சான்றிதழைத் தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர்.
அஞ்சல் துறை, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து 200-க்கும் அதிகமானோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் தமிழக தேர்வுத் துறைக்கு அனுப்பியபோது மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் தமிழக தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.