tamilnadu

img

அரசு மருத்துவமனைக்கு சாலை அமைத்திடுக!

திருவண்ணாமலை, ஜுலை 11- திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் பகுதியில் உள்ள, அரசு மருத்துவ மனைக்கு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பிரச்சார இயக்கம் கலசப்பாக்கத்தில் கிளைச் செயலாளர் வேல்முருகன் தலை மையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், கே.கே.வெங்கடேசன், வி.சுப்பிரமணி, பி.சுந்தர், திருமூர்த்தி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணாநகர், சத்தியமூர்த்தி நகர் பகுதி களுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும், அண்ணா நகர் பகுதிக்கு மேல் நீர்  தேக்க தொட்டி அமைக்க வேண்டும், பேருந்து  நிலையம், அண்ணாநகர், பஜார் வீதி, பள்ளி கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்கா ணிப்புக் கேமரா அமைக்க வேண்டும், சவ ஊர்வலம் செல்ல இடையூறாக கருணீகர் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.