சென்னை, மார்ச் 14- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெள் ளிக்கிழமை (மார்ச் 15) முதல் தமிழ் நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இல வச நீர்மோர் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித் துள்ளார்.
“தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் என்பதால் தான், வெயி லின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். பக்தர்களின் நலன்கருதி நீர் மோர் பந்தல், மேட் தரை உள்ளிட்ட வசதி கள் செய்து தரப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை வெள்ளி யன்று நான் தொடங்கி வைக்கி றேன்” என்று கூறியுள்ளார்.