tamilnadu

பொது முடக்கம் மேலும் 12 நாள் நீட்டிப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம்  ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ கொரோனா நோய்த் தொற்றுபரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை இம் மாதம் 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமல் படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  ஜூலை 19அன்று காலை6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்றுநிலையைக் கண்காணித்துதொடர்ந்து கட்டுப்படுத்தவேண்டிய அவசியத்தைகருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இம் மாதம் 31 ஆம் தேதி காலை 6 மணி வரைதொடர்ந்து தடை விதிக்கப் படுகிறது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர,அனைத்துப் பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

;