tamilnadu

வாயுக் கசிவு விவகாரம்: 2 ஆவது நாளாக போராட்டம்

சென்னை, டிச.28 - சென்னை, எண்ணூர் பெரிய  குப்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த  தொழிற்சாலையில் மூலப்பொரு ளான அமோனியா திரவம் தொழிற் சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அமோனியா திரவம் அவ்வப் போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப் பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலம் திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டி யில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இத் தொழிற்சாலையில், குழா யில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு பரவியது. இதனால் அதனை சுற்றியுள்ள நெட்டு குப்பம், தாழங் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர், சுனாமி குடி யிருப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள்  பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

பெரும்பாலான மக்கள் அமோனியா வாயுவிலிருந்து தப்பிப்பதற்காக திருவொற்றியூர் டோல்கேட் வரை வந்து அந்த பகுதி யில் தஞ்சம் அடைந்தனர். மேலும்  உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட சுமார் 60 பேருக்கு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்த னர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாயு கசிவை நிறுத்தினார்கள். 

மேலும் பாதிக்கப்பட்ட பகுதி களில் 2 நுரையீரல் நிபுணர்களை கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது குழியில் அமோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொழிற்சாலையின் தரத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழு தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. காற்றில் 0.57 பிபிஎம் அமோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்  போது, தொழிற்சாலை நுழைவு வாயி லில் 28 பிபிஎம் அமோனியா வாயு  இருந்துள்ளது. இது அனுமதிக்கப் பட்ட அளவை விட 51 விழுக்காடு அதிகம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமோனியா வாயுவை சுவாசிப்பவர்களுக்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. முதலில் அவர்களுக்கு தொண்டை எரிச்சலுடன் சளி தொற்று காணப்பட்டது. பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் உரத் தொழிற் சாலை நிரந்தரமாக மூடக்கோரி  10 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் புதனன்று தொழிற்சாலை  முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் மட்டும் வீடுக ளுக்குச் சென்றனர். ஆண்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கே அமர்ந்திருந்தனர். இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (டிச.28) மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.