திருவள்ளூர், டிச 15- திருவள்ளூர் மாவட்டம், திரு நின்றவூர் நகராட்சியில் மழைநீரால் பாதி க்கப்பட்ட பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளியன்று (டிச 15), பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திரு நின்றவூர் நகராட்சியில் 14,15,16,17 ஆகிய வார்டுகளில் உள்ள 2500 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். தற்போது மிக்ஜிம் மழை யால் திருநின்றவூரில் உள்ள மேற்கண்ட 4 வார்டுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. வீடுகளில் 5அடி அளவிற்கு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ள தால் வசிக்க முடியாமல் அவதிப்படு கின்றனர். கடந்த 12 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ள தால், தேங்கிய மழைநீர் சாக்கடை யாக மாறிதுர்நாற்றம் வீசுகிறது. இத னால் வீடுகளுக்குள் போகவே முடிய வில்லை. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், ஏ.ஜி.கண்ணன், ஜி.சம்பத், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, பூந்த மல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபர்ட் எபிநேசர், மாவட்டக் குழு உறுப்பினர் கள் தேவா, பச்சையம்மாள், எல்ஐசி ஊழியர்கள் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார், தென் மண்டல பொறுப்பாளர் வி.ஜானகி ராமன், கோட்டத் தலைவர் மனோகரன், துணைத் தலைவர்கள் கிரண்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை கோட்ட எல்ஐசி ஊழியர்கள் மூலம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.1. லட்சம் மதிப் புள்ள படுக்கை விரிப்புகள் வழங்கப் பட்டது. பேட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், 20 ஆண்டு களுக்கு முன்பு குடிசை மாற்று வாரி யத்தின் ஒப்புதலோடு வீடுகள் கட்டப் பட்டுள்ளது. 70 ஆண்டுகளாக ஈசா ஏரி தூர் வாரமல் உள்ளது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழி ற்சாலைகள் பாதித்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும், ரூ.6 ஆயிரம் நிவாரணம் தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. ரேசன் கார்டு இல்லாத வர்களுக்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு க்கொண்டார்.