tamilnadu

img

எதிர்காலத் தலைமுறைக்கு கடந்த காலத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்

வெண்மணி தியாகிகளை நினைவுகூர்வதும் அவர்களுக்கு நினைவாலயம் அமைப்பதும் வெறுமனே மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களது தியாகங்களால் கிடைத்த உரிமையைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வதும் ஆகும். வெண்மணி நினைவாலயம் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் பயிற்சிப் பள்ளி. அது எதிர்காலத் தலைமுறைக்கு கடந்த காலத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்

- என்.சங்கரய்யா -