tamilnadu

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது....

சென்னை:
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந் ததை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப் பித்துள்ளார்.

அதனடிப்படையில் 4 மாவட்டங்களுடன் கூடுதலாக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக் குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட் டங்களையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களுக்கு ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் மாவட் டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பேருந்துகளில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில்  2,210, சேலம் கோட்டம் 513, கும்பகோணம் கோட்டம் 1,592, மதுரை கோட் டம் 1,300, நெல்லை கோட்டம் 1, 153 உள்பட 9,333,27 பேருந்துகள் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிந்துவரும் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் பாதுகாப் பான பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பேருந்துகளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய் யப்பட்டு, அரசு பிறப்பித் துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப் படுகிறது.கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு காலை 6 மணி முதல் பகல் மற்றும் இரவில் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் வழக் கம்போல் இயக்கப்படுகின் றன. அருகில் உள்ள மாவட் டங்களுக்கு விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்கள் சார்பாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெற கவுண்ட்டர் வசதியும் செய்யப்பட்டுள் ளது.

;