செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் சுதந்திர நிறுவப்பட்டுள்ள போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் உருவச் சிலையை காணொலிக் காட்சி மூலம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (நவ.2) திறந்து வைத்தார்.
அஞ்சலை அம்மாள் சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இதில் கலந்துகொண்டு அஞ்சலை அம்மாள் தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்.
சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேய படை தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற தற்காக சிறைத் தண்டனை பெற்றார். அஞ்சலை அம்மாள் விடு தலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களை யும், குடியிருந்த வீட்டையும் விற்பனை செய்து, நாட்டுக்காக தியாகம் செய்தார். அஞ்சலை அம்மாள் பேராசிரியர் நாகநா தன் தாயாரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பாட்டியும் ஆவார் என்பது குறிப் பிடத்தக்கது.