tamilnadu

சென்னையில் இலவச வைஃபை

சென்னை, பிப்.23-  சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு வெள்ளியன்று (பிப்,23)  தொடங்கியது.

மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டின் முதல் நாள், பொரு ளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில் நுட்பங்களை மேம்படுத்து வதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

முன்னதாக தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவாறு சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளில்  முக்கிய மான 1000 இடங்களில் இலவச வைஃபை சேவையை முதல்வர் தொடங்கிவைத்தார்.

முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட 500 இடங்க ளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.