tamilnadu

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர்....

சென்னை:
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சைதாப்பேட்டை சிறைச்சாலையிலிருந்து திடீரென புழல் சிறைக்கு மணிகண்டன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு சைதாப்பேட்டை சிறைச் சாலையில் விதிகளை மீறி சில கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட் பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 16 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த ஜூன் 20 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;