tamilnadu

முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு... ஆக.5ல் இறுதி விசாரணை.....

சென்னை:
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகார் வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்டு 5 ஆம்தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.அதில், ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் ரூ.74 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திரபாலாஜி வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.6 கோடி ஆகும். அதேபோல் திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத் துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்துக்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் 4 ஆம் தேதி வழங்கினர். நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக் குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதி ஆர்.ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு பதிந்து, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்தார்.

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் இந்த வழக்கை 3-வது நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித் தார். அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கு தொடர் பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஆகஸ்டு 5 ஆம் தேதிநடைபெறும். அன்று இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

;