tamilnadu

img

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் காலமானார்

சென்னை, ஏப்.11- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ். ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 97. 1952-ஆம் ஆண்டு மேற்கு வங்கப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி யான பி.எஸ்.ராகவன், சென்னை யை அடுத்த பூந்தமல்லியில் பிறந்  தவர்.

இவர், மேற்கு வங்கம் மற்  றும் திரிபுரா மாநிலங்களில் பல்  வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவர், கடந்த 1961-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுக் குழு வின் செயலாளராக பொறுப் பேற்று, நாட்டின் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றினார். தில்லியில் உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த போது தமிழகத்திற்கு கூடுதல் அரிசியை ஒதுக்கினார்.

ஒரு வகை யில், அதுவே எம்ஜிஆர் சத்துணவு  திட்டத்தை கொண்டு வர உதவி யாக இருந்தது. 1987-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் சென்  னையில் குடியேறினார். ‘தி இந்து’  ஆங்கில நாளிதழ் ஆசிரியர் குழு வுக்கு ஆலோசகராக பல ஆண்டு கள் பணியாற்றினார். பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் கட்டுரைகளை எழுதி யுள்ளார். ஆங்கிலத்தில் பல நூல்களை யும் எழுதியுள்ள ராகவன், தமி ழில் எழுதிய ‘நேரு முதல் நேற்று  வரை’ என்பது பிரபலமான நூலா கும். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

சென்னை, அடையாறு நேரு நகர் 2-வது தெருவில் வசித்து வந்த  பி.எஸ். ராகவன், உடல்நலக் குறைவால் ஏப்ரல் 10 அன்று இரவு  காலமானார். அவருக்கு ஒரு  மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்  ஏற்கெனவே இறந்து விட்டார். பி.எஸ். ராகவனின் இறுதி நிகழ்ச்சி கள் வியாழக்கிழமை ஏப்ரல் 11  காலை 11.30 மணிக்கு பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது.