முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி
சென்னை, ஜன.9 - முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு செவ்வாயன்று (ஜன.9) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக ஜன.12 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜன.18 ஆம் தேதி இறுதி விசாரணையை தொடங்கி 24 ஆம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளை கண்காணிக்க பிக்மி 3.0 மென்பொருள்
சென்னை,ஜன.9- சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் தரம் உயர்த்தப் பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருள் பிக்மி 3.0 திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் செய்தியாளர்களிடம் கூறுகை யில்,“ சுகப்பிரசவங்களை ஊக்குவிக் கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பராமரிப்பு, பயிற்சி பிரிவு, யோகா பயிற்றுவித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளை கண்காணிக்கும் வகை யில் பிக்மி 3.0 எனும் மென்பொருள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் ஏற்படுகிற பிரசவங்கள், மகப்பேறு வசதிகள், தொடர் பராமரிப்பு போன்ற பல வகை யான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்”என்றார்.