சென்னை, ஆக.28-
தமிழ்நாடு வங்கியை உருவாக்க கோரி திங்க ளன்று (ஆக.28) தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு விடுத்த அறைகூவலை ஏற்று இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழி யர் சங்கம் சார்பில், கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் வி.ராஜகேசி தலைமை தாங்கினார்.
அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் தலைவர் தி.தமிழரசு, “ஊதிய உயர் வுக்காக அமைக்கப்பட்ட குழு, 12 விழுக்காடு ஊதிய உயர்வு என்று கூறியதை ஏற்க முடியாது. கடந்த ஆட்சியில் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி யில் 20 விழுக்காடு உயர்வு வழங்கப்பட்டது. அதே அளவு ஊதிய உயர்வு தர வேண்டும்” என்றார்.
“மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்கின்றன. இந்த வங்கி களை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்றினால், அவற்றின் பரிவர்த்தனை 2.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
நகர கூட்டுறவு வங்கி களை இணைத்து 25 மாவட்ட நகர கூட்டுறவு வங்கிகளாக மாற்ற வேண்டும். அதனால் நிர்வாக செலவு குறைந்து, வங்கிகள் பலம் வாய்ந்ததாக மாறும். இதனை செய்ய மறுத்தால், கூட்டுறவு வங்கிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் பேரபா யம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
சம்மேளன பொதுச்செய லாளர் இ.சர்வேசன் காஞ்சி புரத்தில் கலந்து கொண்டார்.