ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு, வாலிபர் சங்கம் சார்பில் பொன்னேரி அருகில் உள்ள சின்னம்பேடு கிராமத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் டி.மதன், பகுதித் தலைவர் டி.பிரசாந்த், செயலாளர் பி.சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பாடியநல்லூரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவ்யபாரதி, அமைப்புச் செயலாளர் சதீஷ், துணை நிர்வாகிகள் யுவராஜ், சாலினி ஆகியோர் பங்கேற்றனர்.
****************
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழும்பூர் பகுதிக்குழு சார்பில் கே.பி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிளைச் செயலாளர் வி.சரவணன் தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர் கே.முருகன், ஆறுமுகம், ஆனந்தன், அன்பு, சிறீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
****************
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பத்தூர் மங்களபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி, சு.லெனின் சுந்தர், மூர்த்தி, வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.