சென்னை, டிச.26 - தென் மாவட்டங்களில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அவர் “அதி கனமழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் போது நடத்தப் படும்”என்றார்.
மழை, வெள்ளத்தால் சான்றிதழ் களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங் களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2 முதல் புதிய பாட புத்தகங் கள் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு பயிற்சி முகாம்
6 முதல் 9 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.