சென்னை,ஆக. 17 “கல்பவிருக்ஸா’ 19’’ என்ற பெயரில் மூன்று நாள் தொடர் கண் மருத்துவ கல்வி திட்ட பயிலரங்கம் சென்னை யில் தொடங்கியது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி செயல் பிரிவான கண் ஆராய்ச்சி மையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. தேசிய அளவிலான முதுகலை மாணவர்க ளுக்கான இந்த பயிலரங்கில் கண்மருத்து மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மூன்றுநாள் பயிலரங்கு நிகழ்வை தொடங்கி வைத்துப் பேசிய டெல்லி யிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையின் ஆர்பி மையத்தைச் சேர்ந்த டாக்டர். நம்ரதா ஷர்மா, மருத்துவ மாணவர்கள் தங்களது அறிவையும், திறனையும் புதுப்பித்துக் கொள்வதற்காக இந்த பயிலரங்கம் பயன்படும் என்றார். செய்முறை பயிற்சி அமர்வில், மாறுகண் போன்ற மிக சிரமமான பிரச்சனை களை எப்படி பரிசோ திப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி, கோனியோஸ்கோப்பி என்ற நோயறிதல் செயல்முறை களை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஒவ்வொரு பிரதிநிதிக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது என்று அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் கூறினார்.