tamilnadu

மகப்பேறு அறுவைச் சிகிச்சைகளுக்கு பெண்களைக் காரணமாக்குவது சரியல்ல!

நல்ல நாள், நல்ல நட்சத்திரம் பார்த்து அந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்று குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதும் உண்டு. இந்த மோசமான கலாச்சாரக் காரணிகள் தமிழ்நாட்டிலும் உண்டு. 

சென்னை, ஜூலை 30 - மகப்பேறு அறுவைச் சிகிச்சைக் கான நியாயமான காரணங்களை ஆய்வு செய்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, உழைப்பு குறைந்ததே சிசேரியன்களுக்கான காரணம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெண்களின் மீது பழிபோடுவது சரியல்ல என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செய லாளர் அ.ராதிகா ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

பெண்களின் பணிச்சுமை குறைந்ததே அதிக சிசேரியன் களுக்கு காரணம் என தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியம் தெரிவித்த கருத்து முற்றி லும் அறிவியலுக்குப் புறம்பான கருத்து என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் கருதுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரச வம் ஆவதில் சிக்கல் ஏற்படும் போது கர்ப்பிணியையும் குழந்தையை யும் காப்பாற்றும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே சிசேரியன் முறை. 

சிசேரியன் செயல்முறைக்கு வந்த பின்னர் தாய் சேய் இறப்பு  விகிதம் உலகளவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் 15 வருடங் களுக்கு முன்பு பிரசவத்தில் பெண் கள் இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேருக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயி ரம் வரை இருந்தது. இந்த இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு வரு டங்களுக்கு முன்பு 300 முதல் 400 வரை குறைந்து இருக்கிறது.

குறைப் பிரசவத்தில் சிசேரியன் மூலம் பிறந்த 600 கிராம் எடையில் இருந்த குழந்தையைக் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற முடிந்து இருக்கிறது. ஆகவே சிசே ரியன் செய்வது பிரச்சனை இல்லை. அது எதற்காக செய்யப் படுகிறது என்பதில் தான் பிரச்சனை இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பெண்களுக்கு பொருளாதார காரணிகளால் குடும்பச் சூழல் பெரிய அளவில் பாதித்துள்ளது. மன அழுத்தம் காரணமாக பிரசவ நேரத்தில் அவர்களுக்கு சுரக்க வேண்டிய ஹார்மோன்களுக்கு தடை ஏற்படுகிறது.

அதனால் பிரசவ வலி ஏற்படுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெண்கள் கர்ப்பக் காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதற்கான வசதிகள் இல்லாத 45 சதவிகித பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு இவை தீர்க்கப் படாமலேயே திருமணம் ஆகும் போது கர்ப்பகால சிக்கல்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக பிர சவத்தின் கடைசி கட்டத்தில் எதிர் பாராமல் உதிரப்போக்கு ஏற்படு வதால் பெரும்பாலும் சுகப்பிர சவத்திற்கு வழியில்லாமல் சிசேரி யன் தேவைப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவ மனைகளின் லாப நோக்கத்திற்காக சிசேரியன் பிரசவங்கள் மேற் கொள்ளப்படுவதாக ஆய்வு விப ரங்கள் தெரிவிக்கிறன.

மருத்துவத் துறையில் அறம் சார்ந்த மனித சேவை குறைந்து, வணிக நோக்கம் புகுந்து விட்டதால் சிசேரியன் பிர சவங்கள் அதிகரித்து இருப்பதை யும் பார்க்க முடிகிறது. இவற்று டன் தாமதமான திருமணம், தாமத மான குழந்தைப் பேறு, உடல் பருமன், இளம் வயது திருமணங் கள் ஆகியவை சிசேரியனுக்கு காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியில், தமிழ் நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 40 சதவிகித அறுவை சிகிச்சை பிர சவங்கள் நடைபெற்றுள்ளன.

கர்ப்பிணிப் பெண்கள் 18 வயதுக்கு குறைவாக இருந்தாலும் அல்லது 34 வயதுக்கு மேல் இருந்தாலும் முந்தைய குழந்தைக்கு இடையே யான இடைவெளி 24 மாதங் களுக்கு குறைவாக இருந்தாலும் அல்லது பிறக்கும் குழந்தை நான்காவது அல்லது அதற்கு மேலான குழந்தை என்றாலோ அந்த கர்ப்ப காலங்கள் மிகவும் ஆபத்தான கர்ப்பங்களாக கரு தப்படுகின்றன. அச்சமயத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது மருத்துவ ரீதியாக நியாயமானதாக உள்ளதைப் பார்க்க முடிகிறது என்று ஆய்வு கள் தெரிவிக்கின்றன.

இந்தியா போன்ற நாடுகளில் நல்ல நாள், நல்ல நட்சத்திரம் பார்த்து அந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்று குடும்பத் தாரின் அழுத்தம் காரணமாக அறு வை சிகிச்சை செய்துகொள்வதும் உண்டு. இந்த மோசமான கலாச் சாரக் காரணிகள் தமிழ்நாட்டிலும் உண்டு. மேற்கண்ட நியாயமான காரணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு  காணாமல் பெண்கள் மீது குற்றம் சுமத்துவது தவறான முன்னுதா ரணம் ஆகும்.

அறுவைச் சிகிச்சை குறித்து தாலுகா, கிராம, மாவட்ட அள வில் விழிப்புணர்வை அரசு ஏற் படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து  உணவுகளை உத்தரவாதப்படுத்து வது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சி மையங்கள் ஏற் படுத்துவது, குழந்தைத் திருமணங் கள் தடுப்பு நடவடிக்கைகள், மன நல ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சையின் தரத்தை உயர்த்தி அரசு மருத்துவமனைகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்து வது போன்ற ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமே தவிர இப்படியான மோசமான கருத்தை பிரச்சாரமாக அமைச்சரே மேற் கொள்வதைத் தவிர்த்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.