சென்னை:
மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆம்ஆண்டு முதல் 1004 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களும், 360 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களும் அந்தபிரிவு மாணவர்களுக்கு வழங்காமல் அநீதிஇழைத்துள்ளது மத்திய அரசு. இது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும்விரோதமானது.இந்த அநீதியை எதிர்த்து பாஜக மற்றும் பாமக கட்சிகளை தவிர்த்து அனைத்து முக்கியகட்சிகளும் குரல் கொடுத்தன. நீதிமன்ற த்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கில் அந்தந்தமாநிலங்களில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டுஅடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களில் ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க எந்ததடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதிதீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை இந்த ஆண்டு அமல்படுத்த மத்திய பாஜக அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடக் கேட்டு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமலாக்கமுடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு முதல் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த தடையும் இல்லாதபட்சத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக அரசின் மனநிலையே பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் மருத்துவப்படிப்பில் சேரவிடாமல் தடுக்கிறது. மத்திய அரசின் நிலைபாட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.எனவே பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.