tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு ஊழியர்கள் நிவாரணம்

சென்னை, டிச. 31 - மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனிக்கிழமை யன்று (டிச.30) 3 மையங்களில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.

அண்ணா நகர் பகுதி பாரதி படிப்பகம், வில்லிவாக்கம் பகுதி நிர்மல் பள்ளி, நுங்கம்பாக்கம் ஏஐஐஈஏ இல்லம் ஆகிய மூன்று இடங்களில் இந்நிகழ்வு நடை பெற்றது.

இதில், சங்கத்தின் அகில இந்திய தலை வர் ரமேஷ், நிர்வாகிகள் கே.சுவாமிநாதன், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ்.ரமேஷ் குமார், ரவிக்குமார், ஜெயராமன் மற்றும் பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, வித்யா தீர்த்தன் உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, இ.சர்வேசன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.சுந்தரம், மகேந்திரவர்மன், வே. இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.