tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கு
3.5 சதவீதம் இடஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, மார்ச் 11 - இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்  வேறு பிரிவினருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையி லான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. மற்றும் எஸ்.சி. பிரிவினர் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அடையா ளம் காணப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை, அவர்களின் கோரிக்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5  விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதிச் சான்றிதழ் வழங்கவும் உத்த ரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல் பிசிஎம் என சாதிச் சான்றி தழ் வழங்கும் போது உரிய வழிகாட்டு  நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வரு வாய் நிர்வாக ஆணையருக்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

15 தொகுதி தாருங்கள் பாஜகவிடம் ஓபிஎஸ் கெஞ்சல்
சென்னை, மார்ச் 11- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையிலான குழு, பாஜகவிடம் தமிழகத்தில் தங்களுக்கு 15 இடங்கள்  வேண்டுமெனக் கேட்டுள்ளது. தற்போது  ஒ.பன்னீர்செல்வம் தமது அணிக்கு அதி முக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு  என பெயர் வைத்துள்ளார்.

இந்தக்குழு ஞாயிற்றுக்கிழமை இரவு பாஜக நிர்வாகிகள் கிஷன் ரெட்டி,  வி.கே.சிங், எல்.முருகன் மற்றும் கே. அண்ணாமலை ஆகியோரைச் சந்தித் துப் பேசியது.

அப்போது, 2024-மக்களவைத் தேர்த லில் மத்திய சென்னை, திருச்சிராப் பள்ளி, கோயம்புத்தூர், மதுரை உட்பட  15 இடங்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்துள்ளது. தற்போது நடைபெற்  றுள்ளது முதல்சுற்று தான். இரண்டாம்  சுற்று நடைபெறும் என ஓ.பன்னீர்செல்  வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் முடக்கம்
சென்னை, மார்ச் 11- தமிழக பள்ளிக் கல்வித்துறையின்  முகநூல் பக்கத்தை திங்களன்று முடக்  கிய சிலர், நடிகர் விஜய் நடித்த படங்களில்  உள்ள காட்சிகளை பள்ளிக் கல்வித்  துறையின் முகநூல் பக்கத்தில் பதி வேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுறித்து சைபர் கிரைம் போலீ சார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

தமிழ்நாடு மாநில  தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி
சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல்  ஆணையராக, ஐஏஎஸ் அதிகாரி ஜோதி  நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு  பிறப்பித்துள்ளது. மாநில தலைமை தேர்  தல் ஆணையராக இருந்த பழனிகுமார்  ஓய்வு பெற்றதையடுத்து ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலை வர்தான் மாநிலத்தின் தலைமை தேர்தல்  ஆணையர் ஆவார். மாநிலம் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் மாநகராட்சி, நக ராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம  ஊராட்சி தேர்தல்கள் இவரது தலைமை யில்தான் நடத்தப்படும் என்பது குறிப்பி டத்தக்கது.

புதுச்சேரி சிறுமி கொலை: குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுச்சேரி, மார்ச் 11 - முத்தியால் பேட்டையைச் சேர்ந்த  9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை  செய்யப்பட்ட வழக்கில், போதைப்பழக் கத்திற்கு அடிமையான 5 சிறுவர்கள் உட்  பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  முக்கிய குற்றவாளியான விவேகானந் தன் (59) திங்கள்கிழமையன்று சிறைக்கு  உள்ளேயே தற்கொலை செய்ய முயற்சித்  துள்ளார். சக கைதி கருணாஸ் கூச்ச லிட்ட நிலையில், சிறைக் காவலர்கள் விவேகானந்தனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை, மார்ச் 11 - பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவானார். இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க சிபிசிஐடி போலீசார், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் குற்ற வாளி) பிறப்பித்துள்ளனர்.