tamilnadu

img

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு

சென்னை, ஜூன் 27- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கிரிக்கெட் என்றால் டோனி,  அரசியல் என்றால் ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரி க்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, “விளையாட்டு என்று  எடுத்துக் கொண்டால் உசைன் போல்ட், தோனி என ஒரு சிலருடைய பெயர்களே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்; இவர்கள் தங்களது சாதனைகளை தாங்களே முறியடித்துக் கொள்வார்கள். அதேபோல் அரசியல் களத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது முந்தைய சாதனையை மிஞ்சுகின்ற வகையில் வெற்றிகளை குவித்து வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி, உழைத்து, 40-க்கு 40 பதக்கங்களையும் வென்று  சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ளது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

ஒன்றிய அரசு ஓரவஞ்சனை! 

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா போட்டி களை நடத்திய மகாராஷ்டிராவுக்கு 25  கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு வழங்கியது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது என்று பிரதமரே பாராட்டினார். ஆனால் இந்த போட்டிகளை நடத்துவதற்கு வெறும் பத்து கோடி ரூபாய் மட்டுமே வழங்கினார். முதன்முறையாக தமிழக வீரர்கள் 98 பதக்கங்களை குவித்து இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 

நம்பர் ஒன் துறையாக மாறும்!

கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியா வின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாறிவிட்டது. சர்வதேச அளவில் செஸ் மற்றும் ஹாக்கி போட்டிகளை சென்னையில் நடத்திய தால் விளையாட்டு கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியிருக் கிறோம். இந்த அரசு எடுத்து வரும் நட வடிக்கையால் சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் வீரர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்த அரசு நிதி உதவி மட்டு மல்லாமல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று விழுக்காடு வேலைவாய்ப்பையும் வழங்கி வரு கிறது. எனவே விளையாட்டுத்துறை மிக விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும்” என்றார்.

அத்துடன் விளையாட்டுத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

100 கோடியில் விளையாட்டு உபகரணம்!

சர்வதேச மற்றும் தேசிய அளவி லான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று வெற்றிபெற்ற நூறு வீரர்களுக்கு 3 சத விகிதம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் பணி ஆணைகள் வழங்கப்படும். டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

22 மினி ஸ்டேடியம்!

திருவெறும்பூர், மன்னார்குடி, உத்தரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப் பாடி, சேலம் மாவட்டம் ஆத்தூர், கும்ப கோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி, இராமநாதபுரம் ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் (மினி ஸ்டேடியம்) 66 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 

பல்கலைக்கழகம்!

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சென்னை அருகே மேலக்கோட்டையூர் அருகில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்ட ஆணையத்தின் சார்பில் பிரத்தியேக ஒலிம்பிக் சைக்கிள் பந்தய ஓடுபாதை ரூபாய் 12 கோடி செலவில் அமைக்கப்படும். 

மதுரையில் ஒலிம்பிக் தர நீச்சல் குளம்! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதிதாக அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகடாமியில் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 37 விளையாட்டு விடுதிகளில், 20 விளையாட்டுகள் தொடர்புடைய 2330 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2600 ஆக உயர்த்தப்படும். மேலும் உணவுப் படி 350 ரூபாய் ஆகவும் சீருடை மானியத் தொகை 6 ஆயிரமாக வும், உபகரண மானியத் தொகை 2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். 

புதிய இளைஞர் கொள்கை!

தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெரும்பான்மையாக உள்ளதை கருத்தில் கொண்டு அவர்கள் நல் லொழுக்கத்துடன் சமூகத்திற்கு உரிய பங்களிப்பை அளிப்பதற்கான முக்கி யத்துவத்தைக் கருதி புதிய இளைஞர் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.