tamilnadu

1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுப் பாடங்களையும் நடத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜூன் 14- புதிய கல்வி ஆண்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்க ளையும் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு பள்ளிகள் முழு அளவில் செயல்படவில்லை. குறைவான நாட்களே செயல்பட்டதால் பாடத் திட்டங் கள் குறைக்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுதிய 10, 11, 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டது. மாணவர்களின் பாடச் சுமை குறைந்த தால் அதனை மட்டும் படித்து தேர்வு எழுதினர். இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற் கான வழிகாட்டுதல்கள், நாட்குறிப்பு போன்றவை பள்ளி கல்வித் துறை மூலம் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. பள்ளிகள் நடைபெறும் நாட் கள், காலாண்டு, அரையாண்டு தேர்வு, பொதுத்தேர்வு தேதிகள் போன்றவை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை திங்கட்கிழமை பள்ளி கள் திறக்கப்பட்டன. 20ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், 27ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வருடம் முழு அளவில் வழக்கம் போல் பள்ளி கள் செயல்பட திட்டம் வகுக்கப்பட் டுள்ளது. அதனால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களும் வழக்கம் போல் நடத்த வேண்டும் என்று கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரிளுக்கு அறிவு றுத்தியுள்ளது. எந்த பாடப்பகுதியையும் தவிர்க்காமல் பாட திட்டத்தில் உள்ள பாடங்களை அந்தந்த காலத்திற்குள் முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது.