tamilnadu

img

பிரதமர் மோடி இன்று வருகை:

சென்னை,ஜன.18- தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணமாக  பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.19) வருகிறார். சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் அவர்,  ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் கோவில்களுக் கும் செல்கிறார். வெள்ளிக்கிழமை (ஜன.19) மாலை யில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.  தொடக்க விழாவின் போது, சுமார்  ரூ .250 கோடி மதிப்பிலான ஒளிபரப்புத்  துறை  தொடர்பான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மேலும், புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனல், டிடி தமிழ் என்ற  பெயரில் தொடங்குவது; 8 மாநிலங் களில் 12 ஆகாஷவாணி பண்பலை நிகழ்ச்சிகள்; மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் டிரான்ஸ் மீட்டர்கள்  உள்ளிட்டவை இதில் அடங்கும்.  மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகையையொட்டி, சென்னையில் இரண்டு நாட்கள் டிரோன் களை பறக்க தடை விதிக்கப்பட்டுள் ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவப்பு மண்டலம்...

மேலும் பிரதமரின் பாதுகாப்பு  வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட் டுள்ளது. சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி ராஜ் பவனில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு

இதற்கிடையே மோடி வருகையை யொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. சென்னையில் 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென் னையில் உள்ள முக்கிய ரயில் நிலை யங்கள், பேருந்து முனையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.