tamilnadu

img

ஆன்லைன் வகுப்புகளுக்கு  ஐந்து நாள் விடுமுறை தொடக்கம்

சென்னை:
தமிழ்நாட்டில் செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனால் ஏற்பட்டுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விடுமுறை விடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.அதன்படி, செப்டம்பர் 21 முதல் ஆன் லைனில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

;