tamilnadu

img

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்க!

சென்னை, ஜூலை 2 - “இந்திய மீனவர்கள் எதிர் நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். இந்திய மீனவர்களின் பாரம் பரிய உரிமைகளை நிலை நாட்டும் வகையில், மீனவர் களுக்குத் தொடர்ந்து இடை யூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்த ரத் தீர்வு காணத் தேவை யான, உறுதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமை ச்சருக்கு தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் (ஜூலை 2) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர் கள் கைது செய்யப்படும் சம் பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ரித்துள்ளதாகக் கவலைப் படத் தெரிவித்துள்ள முதல் வர், 01.07.2024 அன்றும், IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்க ளைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப் படாத மீன்பிடிப் படகுகளி லும் சென்ற தமிழ்நாட்டைச்  சேர்ந்த 25 மீனவர்கள்  இல ங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார். 

1974-ஆம் ஆண்டி லிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொட ர்ந்து இந்தப் பிரச்சனை நிலவு வதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பி ட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தலைமையிலான மாநில  அரசு கச்சத்தீவு ஒப்பந்த த்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடா ளுமன்றத்திலும் எதிரொலி த்தது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய திமுக தலைவர் கலைஞர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் ‘ஒன்றிய அரசு மேற்கொண்ட அனை த்து நடவடிக்கைகளும் அரசி யலமைப்பிற்கு முரணா னதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறை யாண்மை  ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடி யாது’ என்று திட்டவட்ட மாகக் கூறியிருந்ததை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

பாஜக தலைமை யிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையைத் தேர்தல் நேர முழக்கத்திற் காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்கக் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சி யையும் அது எடுக்க வில்லை என்றும் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த மீன வர்கள் எதிர்நோக்கும் இன் னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டா யமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ள முதல்வர், எனவே, தமிழ்நாட்டு  மீனவர்களின் பாரம்பரிய உரி மைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான-உறு தியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

;