tamilnadu

img

சென்னையில் பெண்களுக்கான முதல் பாலியல் நல மையம்

சென்னை, ஜூலை 28-   இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்க ளுக்கான பாலியல் நல மையம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதனை தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். சென்னையிலுள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் கடந்த 26 ஆண்டுகளாக குழந்தை யின்மைக்கான பிரச்சனை களுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் தீர்வுகளையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், இனவிருத்தி மருத்துவம் தொடர்பாக அவ்வப்போது ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கு களையும் நடத்திவருகிறது.  2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இதன் 7ஆவது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம், சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் ஞாயிறன்று துவங்கியது. தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு, கருத்தரங்கையும், பெண்களுக்கான பாலியல் நல மையத்தையும் துவக்கிவைத்தார். பின்னர் அவர்  பேசுகை யில், இந்த கருத்தரங்கை தலைமையேற்று நடத்தும் டாக்டர் ஜெயராணி மகப்பேறு மருத்துவராக சிறந்து விளங்குகிறார். அவரது குடும்பமே இப்போது குழந்தையின்மை சிகிச்சையில் முன்னிலையில் இருந்து குழந்தையில்லா பிரச்சனைக்கு தீர்வு அளித்து வருகிறார்கள். பெண்கள் பாலியல் நல மையம் மூலம் பல பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். இதில் ஐ.எஸ்.ஏ.ஆர். அமைப்பின் தலைவர் ஜெய்தீப் மல்கோத்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழச்சி தங்க பாண்டியன் வழங்கினார். இந்த மருத்துவ மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து 2 மருத்துவ வல்லுனர்களும், இந்தியாவில் இருந்து 122 மருத்துவ வல்லுனர்களும், ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். பாலியல் மருத்துவ அறிவியலில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அலசினர். மாநாட்டுக்குழு தலைவர் கே.எஸ்.ஜெயராணி, செய லாளர் டி.காமராஜ், பிரபல மருத்துவ வல்லுனர்கள் ரேவதி ஜானகிராமன், சாந்தகுமாரி, பாரதி தோர்பட்டீல், சுனிதா தண்டுல்வாட்கர், ரமணி தேவி, அஞ்சலாட்சி ஆகி யோரும் சிறப்புரையாற்றி னர்.