tamilnadu

img

ஆகஸ்ட் மாதம் முதல்  வகுப்பு வாரியாக பாடம்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம்  முதல் வகுப்பு வாரியாக தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று உளவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் 14 தொலைக்காட்சிகளின் மூலம் வரும் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான். பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது.