சென்னை,டிச.31- தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அதி காரியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணி யாற்றி வருகிறார்.
மாநில அரசின் பரிந்துரை யின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப் பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப் படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்துள் ளது. தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையா கும்.