tamilnadu

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பிப்.8 திமுக எம்.பி.க்கள் போராட்டம்

சென்னை,பிப்.2- ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட் டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மக்கள் நலனை முழுமையாக புறக் கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் ஒன்றிய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள காந்தியடி கள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிப்.8 அன்று திமுக  எம்.பி.க்கள் போராட்டம் நடத்த  உள்ளதாக தலைமை கழகம் அறிவித் துள்ளது. அதில், பட்ஜெட்டில் தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டது கண் டித்து, வெள்ள நிவாரணம் வழங் காததை கண்டித்து போராட்டம்  நடத்த உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.