சென்னை, பிப்.29- மக்களவைத் தேர்தல் தோல்வி பயம் பிரதமர் முகத்தில் தெரி கிறது; தூத்துக்குடி பேச்சில் அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டியது என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.
திமுக தலைவர் என்ற வகை யில், தமது கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத் தில் தெரிகிறது. அந்தக் கோபத் தைத்தான் அவரது முகம் காட்டு கிறது. திமுக-வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரத மர். அவர் கொண்டு வந்த திட்டங்க ளுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
எய்ம்ஸ்-சை எதிர்த்தோமா; மெட்ரோ ரயிலை எதிர்த்தோமா?
எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட் டங்களுக்குத் தடையாக இருந் தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட் டும். பொத்தாம் பொதுவாகக் குற் றம் சாட்டுகிறார் பிரதமர்.
நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்பு கிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழ வர்களை, நிலத்தில் இருந்து விரட்டு வது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையி னர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்ப டையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம்.
இரக்கமற்ற ஆட்சி நடத்தும் மோடிக்கு என்ன தகுதி உள்ளது?
ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தரா மல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவார ணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.
திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த் தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ் நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்க ளைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பாஜகவுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரி யாத பாஜக, வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட் டும் என நான் வாழ்த்துகிறேன்.
பாஜக அரசின் வஞ்சகத்தை மக்களிடம் பரப்புங்கள்
திமுக உடன்பிறப்புக்களைப் பொறுத்தவரை, மாபெரும் ஜன நாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜன நாயகத்தையும் பாதுகாத்திட நடை பெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதா கும். பாசிசத்தை வீழ்த்திட, மத வெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இந்தியா’ கூட்டணி வென் றிட வேண்டும். இந்திய ஒன்றி யத்தை ஆளும் பாஜக-வை ஆட்சி யில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.
பாஜக அரசின் வஞ்சகச் செயல் களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்ப வேண்டும். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர் களுக்கு நினைவூட்டும் கடமை தான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகை யில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்தியா அணியின் வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது
இந்தியாவின் மற்ற மாநிலங்க ளிலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பணி களைச் சிறப்பாகத் தொடங்கி விட்ட தாகச் செய்திகள் வருகின்றன. ஒவ் வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை பாஜக தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணி யின் வெற்றி அகில இந்தியா முழு மைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது.
‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும். அது இந் திய ஒன்றியத்தில் ஆட்சி மாற் றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும். தலைவர் கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரி சாகும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.