தந்தை பெரியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.