tamilnadu

img

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா.... முதலிடத்தில் சென்னை  

சென்னை
ஊரடங்கு கடைப்பிடித்தும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 609 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நெருக்கும் அதிகம் உள்ள சென்னை மாவட்டம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. 

அங்கு இதுவரை 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மண்டலத்தில் ராயபுரம் அதிக சேதாரத்தைச் சத்துள்ளது. ராயபுரத்தில் இதுவரை 40 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவிக. நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.  
 

;