‘மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
‘மிக்ஜம்’ புயலால் தமிழ்நாட் டின் தலைநகரம் சென்னையில் 49 ஆண்டுகாலத்தில் இல்லாத அள விற்கு பெரும் மழை கொட்டித் தீர்த் துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாத நிலை உள்ளது. சென்னையை சுற்றி யுள்ள மாவட்டங்களான திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட் டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற் கண்ட மாவட்டங்களில் பல இடங்க ளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட் டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் வழுதிலம்பேடு, ரெட்டம்மேடு, அய நல்லூர், பொன்னேரி வட்டம் தேவம் பேடு, மெதூர், மீஞ்சூர் ஒன்றியத் தில் காட்டூர், தத்தைமஞ்சு, வாய லூர், திருவள்ளவாயல், ஊத்துக் கோட்டை வட்டத்தில் தாராட்சி, காக்கவாக்கம், வெங்கல், போந்த வாக்கம் ஆகிய ஊராட்சிக்கு உட் பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயி ரம் ஏக்கரில் கதிர்கள் பறிந்தும், பறி யாமலும் உள்ள பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பயிர்களில் இனி கதிர் பறிந் தாலும் அவை முற்றிலும் பதராகத் தான் வரும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டம் தொடூர், வேலி யூர், புதுப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கதிர்பூர் மற்றும் பெரும்பத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய வட்டங்கள் உட்பட பல கிராமங்களில் அறு வடைக்கு தயாராக இருந்த 6050 ஏக்கரில் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிக் கப்பட்டுள்ளன. மேலும் 540 ஏக்க ரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற் றும் 50-க்கும் மேற்பட்ட கால்நடை கள் இறந்து முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளன.
இதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பயிர்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பாதிக் கப்பட்ட பகுதிகளில் உடனே ஆய்வு செய்து, முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்க ருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வர லாறு காணாத அளவிற்கு பெய்த மழையில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட் டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவா ரண நிதியை தமிழ்நாட்டிற்கு ஒன் றிய அரசு உடனே வழங்க வேண் டும்.