உத்தரபிரதேச லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய பேரணி மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனி கார் ஏற்றி 4 விவசாயிகளை கொன்றார். அந்த கொலைகார அமைச்சரை பதவிநீக்கம் செய்து உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து பொன்னேரியில் செவ்வாயன்று (அக்3) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தொமுச நிர்வாகி சிவக்குமார், எல்டியூசி மாநில துணைத் தலைவர் எஸ்.ஜானகிராமன், ஏஐசிசிடியூ மாவட்ட பொருளாளர் ஜெயராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், ஐக்கிய விவசாயி முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஜெ.அருள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் பேசினர்.