நீர்நிலைகளை அழித்து ரயில் பாதை எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது
திருவள்ளூர், மே 19- நீர்நிலைகளை அழித்து அதன் மீது ரயில் பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டிவனம் – நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழி தடத்தில் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், பாண்ரவேடு ஏரி மற்றும் நந்தி மடுகு ஆகிய நீர்நிலைகள் அமைந்துள்ளன. ரயில் பாதைக்காக இந்த ஏரியின் மீது மண்ணை போட்டு மூடி, அதன் மீது ரயில் பாதை அமைக்கப்படுகிறது. பாண்ரவேடு ஏரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதே போல நந்தி மடுகு நீர் ஊற்று பகுதியாகும். பள்ளிப்பட்டு சுற்றி யுள்ள 7 கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு நீர் ஆதார மாக இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி யின் ஒரு பகுதியை 300 லோடு மண்ணை கொண்டு வந்து, நீர்நிலைகளை மூடி விட்டு அதன் மீது ரயில் பாதையை அமைக்க, ரயில்வே நிர்வாகம் பணி களை மேற்கொண்டு வரு கிறது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீர் நிலைகள் மீது மண்ணை கொட்டி பாதை அமைப்பதைவிட மேம்பாலம் அமைத்து, அதன் மூலம் ரயில் பாதையை அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று (மே 19), பாண்ரவேடு ஏரிக்கு சென்றபோது காவல்துறையினர் அனை வரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், சங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் சுதாகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.