tamilnadu

img

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு  

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.  இதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து ஹோட்டல் ரூம்களும் புக் செய்யப்பட்டுள்ளதாக காணப்படுகின்றன.  

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை 174 நாடுகள் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 174 ஆண்கள் அணியும் 145 பெண்கள் அணியும் பதிவு செய்துள்ளனர்.  

இந்த நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க, ஜூன் 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரால் செஸ் ஒலிம்பியாட் தலைநகர் சென்னைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

;