tamilnadu

இந்திய மீனவர்களின் காவல் 15-வது முறையாக நீட்டிப்பு

சென்னை, மே 2-எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதமிழக மீனவர்கள்4 பேரின் காவல் 15-வது முறையாக நீட்டித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். நான்கு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்றம், மீனவர்களின் சிறைக்காவலை 15-வது முறையாக நீட்டித்து, வருகின்ற 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

;