tamilnadu

img

ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை,ஆக.13 டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப்பணியிடங்களை நிரப்ப நவம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப் படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வி த்தகுதி) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), வரைவாளர் (கிரேடு-3), விடுதி கண்காணிப் பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இள நிலை வரைவு அலுவலர், இளநிலை தொழி ல்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வை யாளர், சர்வேயர், உதவி வேளாண் அலு வலர், மேற்பார்வையாளர் (நெசவு), ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), ஏசி டெக்னீசியன் என பல்வேறு விதமான பதவிகள் இடம்பெற்றுள் ளன.

சில வகை பதவிகளுக்கு பாலிடெக்னிக் படிப்பும், சில பணிகளுக்கு ஐடிஐ-யும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தகுதியும் பணிக்கு பணி மாறு படும். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்பு தகுதியும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி செப்டம்பர் 11-ம் தேதி வரை  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவம்பர் 9 மற்றும் 11, 12, 13, 14  ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை, ஒவ்வொரு பதவிக்குரிய கல்வித்தகுதி, காலி யிடங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.